15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 6 பேர் கொலை வழக்கு  குற்றவாளி கைது

by Editor / 11-02-2024 10:01:42pm
 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 6 பேர் கொலை வழக்கு  குற்றவாளி கைது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006- ஆம் ஆண்டு பதிவான குற்ற வழக்கின் குற்றவாளியான கபீர்@ மணிசாகுல் @ அபு குரைரா(42) என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றி..மாற்றி  கூறி வந்துள்ளார்.. இந்நிலையில்  ,குற்றவாளி கபீர்@ மணிசாகுல் @ அபு குரைராவை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவிட்டதின் பேரில் கடையநல்லூர் மற்றும் தென்காசி காவல் துறையினர் இணைந்து இன்று அவனை தென்காசியில் வைத்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேற்படி குற்றவாளி ,கடந்த 2007- ஆம் ஆண்டு தென்காசியில் நடைபெற்ற 6 பேர் கொலைவழக்கில் தொடர்புடைய  குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது

Share via