விமான பயணி கடத்தி வந்த 322 கிராம் தங்கம் பறிமுதல்.

by Staff / 13-03-2024 05:08:14pm
விமான பயணி கடத்தி வந்த 322 கிராம் தங்கம் பறிமுதல்.

துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததால் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தை மதுரை விமான நிலைய சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தபோது ஆண் பயணியிடம் அவரது உடமைக்குள் மறைத்து வைத்திருந்த 21 லட்சத்து 31 ஆயிரத்து 640 ரூபாய் மதிப்பிலான 322 கிராம் தங்கம் பிடிபட்டது.சுங்க இலாகாவின் நுண்ணறிவு பிரிவினரின் விசாரணையில் திருச்சி மாவட்டம் சரபண்டார ராஜன் பட்டடினத்தை சேர்ந்த பர்னஸ் அகமது பிலால் ( 26) என தெரியவந்தது. பர்னஸ் அகமது பிலால் என்ற பயணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது

 

Tags :

Share via