பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? -ஆளுநர் விளக்கம்

by Staff / 12-02-2024 02:51:25pm
பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? -ஆளுநர் விளக்கம்

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ரவி உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் தனது உரையை முழுமையாக படிக்காமல் ஒரு சில நிமிடங்களில் முடித்தார். பின்னர் அவையில் இருந்து வெளியேறி சென்றார். இந்நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ள அவர், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் படித்து முடிக்கும் வரை அவையில் இருந்தேன். தேசிய கீதம் இசைக்கப்படும் என்று கருதி இருக்கையில் இருந்து எழுந்தேன். சபாநாயகர் சில விமர்சனங்களை முன்வைத்ததால் அவையில் இருந்து வெளியேறினேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via