விவசாயிகள் மீது புகை குண்டு வீச்சு: உதயநிதி கண்டனம்
தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தாக்கப்படுவதற்கு அமைச்சர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட உரிமைகளை கோரிக்கையாக முன் வைத்து தலைநகர் டெல்லி நோக்கி அமைதியாக புறப்பட்ட விவசாயிகளைத் தடுக்க வன்முறையை பிரயோகிக்கும் ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
வேளாண் விரோத ஒன்றிய அரசால் கண்ணீரில் மிதக்கும் விவசாயிகளுக்கு எதிராக கண்ணீர் புகையை வீசுவது, நாற்று நட்டு உணவு தரும் உழவர்களைத் தடுக்க ஆணிகளை சாலையில் நடுவது என்று இந்திய ஒன்றியம் இதுவரை கண்டிராத அடக்குமுறைகளை பாசிஸ்ட்டுகள் ஏவுகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு அஞ்சி அவர்களை தடுப்பதாக நினைத்து தனக்குத் தானே வேலியிட்டு ஒளிகிற பாசிஸ்ட்டுகளின் அடக்குமுறையும் - ஆணவமும் நிரந்தரமல்ல.விரைவில் #INDIA வெல்லும் நாளில் விவசாயிகளின் கோரிக்கைகளும் வெல்லும், "என குறிப்பிட்டுள்ளார்.
Tags :