கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ. மகன் சிவில் நீதிபதியாக தேர்வு

by Staff / 18-02-2024 01:41:24pm
கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ. மகன் சிவில் நீதிபதியாக தேர்வு

மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸின் மகன் சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மணல் கொள்ளையர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ. லூர்து பிரான்சிஸின் மகன் மார்ஷல் ஏசுவடியான், டிஎன்பிஎஸ்சி தேர்வில் வென்று சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உன்னை நீதிபதியாக பார்க்க வேண்டும் என என் தந்தை சொல்லிக் கொண்டே இருப்பார் என மார்ஷல் ஏசுவடியான் தெரிவித்தார். அவரது ஆசையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி, மிகவும் உதவியாக இருந்தது என குடும்பம்தான் என நெகழ்ச்சி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via