லாட்டரியில் ரூ.795 கோடி வென்ற 28 வயது இளைஞர்
சீனாவை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கு தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது. லாட்டரியில் அவர் ரூ. 795 கோடி வென்றுள்ளார். இதுவே சீனாவில் ஒருவர் லாட்டரியில் வென்றுள்ள மிக உயர்ந்த தொகை என்று கூறப்படுகிறது. அந்த இளைஞர் குய் மாகாணத்தில் சிறு தொழில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இம்மாதம் 7ஆம் தேதி அவர் அந்த பணத்தை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. பணத்தை வென்ற நாளன்று தான் மகிழ்ச்சியில் தூங்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags :