கணவனை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.

by Editor / 24-02-2024 06:58:25pm
 கணவனை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வேலாயுதபுரத்தில் சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மனைவி வசந்தா, இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு  காரணமாக அடிக்கடி பிரச்சினை வரும் என்று கூறப்படுகிறது. இன்றும் அது போல் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஜெயராஜ் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்ததாகவும், இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி வசந்தா அருகில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி ஜெயராஜ் தலையில் போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்ததும் ஓட்டப்பிடாரம் போலீசார் விரைந்து சென்று ஜெயராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வசந்தாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :  கணவனை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.

Share via