பெற்றோர் கல்லறையில் விஷம் அருந்தி உயிரிழந்த மகன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த சுரேஷ் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சுரேஷ் கடந்த 12ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பாத நிலையில், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி சாத்தூர் போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிய நிலையில், நேற்று சுரேஷ் அவரது பெற்றோர்களை அடக்கம் செய்துள்ள கல்லறையின் மேல் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்ட உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷ் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :