நடுக்கடலில் இரண்டு மீனவர்கள் கொலை ; மீனவர்கள் வேலை நிறுத்தபோராட்டம்.
நாகையில் நடுக்கடலில் அக்கரைப்பேட்டை - கீச்சாங்குப்பம் மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் 3 பேர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகில் அவர்களது மீன்பிடி வலை சிக்கியதால் இரு பிரிவினரிடையே இந்த மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்தநிலையில் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இலுவைமடிவலை மூலம் நடைபெறும் மீன்பிடி முறையை தடை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.விசைப்படகு மீனவர்களால் நிகழ்த்தப்பட்ட கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டும், பைபர் படகு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் கீழ்வேளூர் , வேதாரண்யம் தாலுக்கா மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 15 கிராம பைபர் படகு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளனர்.கடற்கரையோரங்களில் ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் நிறுத்தம்
Tags : நடுக்கடலில் இரண்டு மீனவர்கள் கொலை ; மீனவர்கள் வேலை நிறுத்தபோராட்டம்.