நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் அதிரடி கைது - ஜல்லி கற்களுடன் லாரி பறிமுதல்.

by Editor / 27-02-2024 09:14:31am
நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் அதிரடி கைது - ஜல்லி கற்களுடன் லாரி பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அம்பலசேரி கிராமத்தின் அருகே சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி தலைமையிலான வருவாய்த் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது திருவரங்கநேரி கிராமத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் நவீன்எபிராஜ் என்பவர் அந்தப் பகுதியில் லாரியில் ஜல்லி கற்களை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது ரோந்து பணியில் இருந்த வட்டாட்சியர் அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் தமிழக அரசின் எந்தவித அனுமதி சீட்டும் இல்லாமல் ஜல்லிகற்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த லாரியை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.தொடர்ந்து கட்டாரிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் 379, 21 (4) M&M (DR) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த நாம் தமிழர் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் நவீன் எபிராஜ் என்பவரை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். 

நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் அரசின் அனுமதியின்றி ஜல்லி கற்களை கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்ட விவகாரம் சாத்தான்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

Tags : நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் அதிரடி கைது - ஜல்லி கற்களுடன் லாரி பறிமுதல்.

Share via