அமைச்சர்  தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணை தொடக்கம்.

by Editor / 28-02-2024 09:10:43am
அமைச்சர்  தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணை தொடக்கம்.

சொத்து குவிப்பு வழக்குகளில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளின் இறுதி விசாரணை இன்று முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை நீதிபதி இன்று தொடங்குகிறார். இந்த வழக்கின் விசாரணை இன்று (28.02.2024), நாளை (29.02.2024), மார்ச் 5 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

 

Tags : அமைச்சர்  தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணை தொடக்கம்.

Share via