14 பேர் பரிதாப பலி.. பயங்கர விபத்து

by Staff / 29-02-2024 11:33:43am
14 பேர் பரிதாப பலி.. பயங்கர விபத்து

மத்தியப்பிரதேசத்தில் இன்று பிக்கப் லோடு வாகனம் தலைகுப்புற கவிழ்ந்ததில் பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். திண்டோரியில் உள்ள பட்ஜார் காட் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை ஷாபுரா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via