தேர்வெழுத தாமதம்.. மாணவன் அதிர்ச்சி முடிவு

by Staff / 01-03-2024 04:36:52pm
தேர்வெழுத தாமதம்.. மாணவன் அதிர்ச்சி முடிவு

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் மங்குருலா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். அங்கு இன்று முதல் 11ஆம் வகுப்பு தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ஒரு நிமிடம் தாமதமாக தேர்வெழுத சென்ற சிவகுமாரை, கண்காணிப்பாளர் தேர்வெழுத அனுமதிக்க மறுத்ததால் மன வேதனையில் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து மாணவர் எழுதி வைத்த கடிதத்தை வைத்து அவரின் உடலை ஏரியிலிருந்து கிராம மக்கள் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via