இதயமற்ற, காது கொடுத்துக் கேட்காத,அரக்க குணம் கொண்டவர்களுக்கே நாம் மீண்டும் மீண்டும் வாக்களிக்கிறோம்

by Staff / 30-03-2024 01:00:57pm
இதயமற்ற, காது கொடுத்துக் கேட்காத,அரக்க குணம் கொண்டவர்களுக்கே நாம் மீண்டும் மீண்டும் வாக்களிக்கிறோம்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேனை ஆதரித்து இன்று திரேஸ்புரம் பகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 'நான் தெறிக்கவிடுவது சரி, ஆனால் ஏப்ரல் 19ஆம் தேதி நீங்கள் மைக் சின்னத்தில் வாக்கு செலுத்தி தெறிக்க விட வேண்டும். உங்களின் உரிமைக்காக, உரக்க குரல் எழுப்புவதற்காக இந்த மைக் சின்னத்தை ஏந்தி வந்திருக்கிறேன். நிலத்தை, வளத்தை, காற்றை நஞ்சாக்கிய பல நச்சு ஆலைகள் இந்த மாவட்டத்தில் உள்ளன. நாம் எவ்வளவு போராட்டம் நடத்தினாலும் அதனை ஏறெடுத்து பார்க்காத, இதயமற்ற, காது கொடுத்துக் கேட்காத, அரக்க குணம் கொண்டவர்களுக்கே நாம் மீண்டும் மீண்டும் அதிகாரத்தை கொடுக்கிறோம்' என்றார்.

 

Tags :

Share via