தொடங்கியது காங்கிரஸ் தேர்தல்

by Staff / 17-10-2022 11:55:14am
தொடங்கியது காங்கிரஸ் தேர்தல்

காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. காங்கிரசின் புதிய தலைவரை தேர்வு செய்ய மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் வாக்குப்பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே, சசிதரூர் ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் உள்ள நிலையில் வாக்கு பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் இடைகால தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் வாக்குகளை செலுத்துகின்றனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் இந்த தேர்தலின் மூலம் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். நாடு முழுவதும் 9,300 பேர் வாக்களிக்கும் தேர்தலில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

 

Tags :

Share via