ஐபிஎல் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

by Staff / 30-03-2024 02:23:57pm
ஐபிஎல் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஹைதராபாத்தின் உப்பல் மைதானத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதனால் டிக்கெட் விற்பனையை Paytm நிறுத்தியுள்ளது. ஆனால் இது தவிர சில சைபர் கிரைம் குற்றவாளிகள் ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்வதாக கூறி QR குறியீடுகளை அனுப்பி பணம் வசூல் செய்து வருகின்றனர். இதுபோன்ற விஷயங்களை நம்பவே வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

 

Tags :

Share via