போதைப் பொருள் வழக்கு: இயக்குனர் அமீருக்கு சம்மன்

by Staff / 31-03-2024 01:14:37pm
போதைப் பொருள் வழக்கு: இயக்குனர் அமீருக்கு சம்மன்


ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில், முன்னாள் திமுக நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் தயாரித்து வரும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தை இயக்குனர் அமீர் இயக்கி, நடித்து வருவதால், அமீருக்கும் கடத்தலில் சம்பந்தம் இருக்கக் கூடும் எனக்கருதி போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். வருகிற 2ம் தேதி டெல்லி அலுவலகத்தில் காலை 11 மணியளவில் அமீர் நேரில் ஆஜராகும் படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via