தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டம்

by Staff / 31-03-2024 01:25:47pm
தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டம்

 

திண்டுக்கல் மாவட்டம் எஸ்.பாறைப்பட்டி கிராம மக்கள் தங்களது ஊரில் திருவிழா நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், சிலரது தூண்டுதலின் பேரிலும், தேர்தலை காரணம் காட்டியும் திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் கையில் கருப்பு கொடியுடன் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து இன்று (மார்ச்.31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டு ஊரை காலி செய்யப் போவதாகவும் தெரிவித்த்னர் இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .

 

Tags :

Share via