அண்ணாமலை செருப்புக்கு சமமானவர் - செல்லூர் ராஜூ
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்பது ‘பழைய பிய்ந்த செருப்பு’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து மதுரையில் இன்று பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலை செருப்புக்கு சமமானவர்” என்று விமர்சித்தார். மேலும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய அண்ணாமலையுடன் கூட்டணி வைத்துள்ள டிடிவி தினகரனுக்கு மானம் ரோஷம் இருக்கிறதா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
Tags :