தமிழக அமைச்சரின் ஊழல் வழக்கு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

by Staff / 05-04-2024 12:36:30pm
தமிழக அமைச்சரின் ஊழல் வழக்கு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

2008ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு முறைகேடாக ஒதுக்கியதாக கூறி அமைச்சர் ஐ. பெரியசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததை ரத்து செய்த, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ஐ பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 8ம் தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

 

Tags :

Share via