கள்ளக்காதலை கண்டித்த கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி

by Staff / 07-04-2024 12:23:17pm
கள்ளக்காதலை கண்டித்த கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி


புதுச்சேரி கோரிமேடு பகுதியில் வசித்து வந்தவர் பாஸ்கர் (48). இவரது மனைவி ஷர்மிளாவுக்கும் (44), வேறு ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை அறிந்த பாஸ்கர், மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. தொடர்ந்து கண்டித்து வந்த கணவரால் ஆத்திரமடைந்த ஷர்மிளா நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) கணவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக நாடகமாடிய நிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via