கெஜ்ரிவால் விடுவிக்கப்படுவாரா. - இன்று தீர்ப்பு
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளது. மதியம் 2.30 மணிக்கு நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா தீர்ப்பு வழங்குவார். அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டிருப்பது குறித்தும், இந்த கைது ஜனநாயகம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் போன்ற அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் மனுவில் கூறியுள்ளார்.மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் மற்றும் ஆம் ஆத்மி எம்எல்ஏ துர்கேஷ் பதக் ஆகியோரிடம் அமலாக்கத்துறை நேற்று மீண்டும் விசாரணை நடத்தியது.
Tags :