பெண்கள் தாலியை இழக்க நேரிடும்

by Staff / 23-04-2024 02:07:58pm
பெண்கள் தாலியை இழக்க நேரிடும்

நாடு முழுவது கடந்த 19ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 102 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ளது. இந்நிலையில் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 26ஆம் தேதி 88 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் மகனும் கர்நாடகா எம்.எல்.ஏவுமான யதீந்திரா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்துப் பெண்கள் தங்களது தாலியை இழப்பது மட்டுமல்லாமல், அனைத்து தாய்மார்களும் தங்கள் கணவனை இழக்க நேரிடும். பெண்கள் எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல் கணவன் மற்றும் குழந்தைகளை இழக்க நேரிடும் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via