செங்கலை காட்டி ஊர் ஊராக சுற்றும் உதயநிதி-எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.

by Editor / 10-04-2024 08:41:55am
செங்கலை காட்டி ஊர் ஊராக சுற்றும் உதயநிதி-எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.

செங்கலை காட்டி ஊர் ஊராக சுற்றும் உதயநிதி விளம்பரத்தை தேடி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன்  இருக்கிறார்-எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ மாநில தலைவரும், வேட்பாளருமான முகம்மது முபாரைக்கை ஆதரித்து இன்று  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பரப்புரையில் ஈடுபட்டார். இதில்  முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேடையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், 

கடந்த 15 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஸ்டாலின். என்ன செய்தோம் என மக்களுக்கு சொல்ல மாட்டிகிறார்.சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.  அவரிடம் எதுவுமே இல்லை எனவும்  மோடியுடன் நான் சிரிப்பது தவறா. இது சாதாரண விஷயம் சிரித்தால் பல் தெரியும் அதை கிண்டல் அடிக்கும் உதயநிதி, விரத்தியின் விளிம்புக்கு சென்று விட்டார். உதயநிதி மட்டும்  பாரத பிரதமர் மோடியுடன் வணக்கம் சொல்லலாமா என அவருடன் வணக்கம் தெரிவித்த  புகைப்படத்தை மேடையில் எடப்பாடி பழனிச்சாமி காண்பித்தார்..

மேலும் பேசிய அவர் சிவாஜி கணேசனே தோற்றுவிடுவார் அந்த அளவுக்கு உதயநிதி நடிக்கிறார் எனவும். திமுகவில் இருந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து வருடமாக பெஞ்சை தேய்ததுதான் மிச்சம் என விமர்சித்தார். 

நிர்வாக திறன் அற்ற அரசாக திமுக அரசு உள்ளது . பெரிய திருடனை பார்த்து சின்ன திருடன் பேசுவது போல் தேர்தல் பத்திரம் பற்றி ஸ்டாலின் பேசுவது உள்ளது.656 கோடி திமுகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் மூன்று ஆண்டுகளில் கிடைத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்  மூலம் திமுகவிற்கு 6 கோடி ரூபாய் கிடைத்தது. இது ஊழல் அல்ல. ஆனால் திமுகவிற்கு ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலம் 509 கோடி கிடைத்துள்ளது.. அதிமுக ஆட்சிக்கு வந்தால் இது எல்லாம் தோண்டி எடுக்கப்படும். கிண்டல் கேலி பேசும் ஸ்டாலின்,  முதலில் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும்.. உங்கள் முகமே கோணலாக உள்ளது.  ( நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை).


ஜாதியையும் மதத்தை பார்க்காத கட்சி அதிமுக. மதத்தால் ஜாதியால் வேறுபடுத்தி காட்டுவதை அதிமுக ஒருபோதும் ஏற்காது.. நீங்க நலமா? எனக் கூறும் ஸ்டாலின், திமுக ஆட்சியில் யாராவது நலமாக இருக்க முடியுமா? மக்கள் கோபப்பட மாட்டார்களா என்ற சிந்தனையோடு இல்லாமல் இதை கேட்கிறார். திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ஊழல் மலிந்துவிடும். கலெக்சன், கமிஷன், கரெப்சன் இது தான் திமுக.

பாட்டில் ஒன்றிற்கு  பத்து ரூபாய் கூடுதலாக விற்கும் மதுகடையில் நாள் ஒன்றிற்கு 10 கோடி ரூபாய் டாஸ்மாக் மூலம் கிடைக்கிறது..வருடத்திற்கு 3000 கோடி கப்பம்கட்டிய அமைச்சர் தற்போது பாதுகாப்பான இடத்தில் ( சிறையில்) இருக்கிறார். ஆட்சிக்கு வந்து திமுக பெரிய திட்டங்களை கொண்டு வரவில்லை . அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி அல்ல, வெளிச்சம் தந்த ஆட்சி இது.

அனைத்து துறைகளிலும் தேசிய விருது பெற்ற அரசு, அதிமுக அரசு.எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரி அரசு அதிமுக அரசு. திண்டுக்கல்லை சேர்ந்த சித்தையன் கோட்டை நாராயணசாமி என்பவர் இரண்டு கை இல்லாத தொழிலாளி. ஆட்சியில் நான் இருந்த போது இவர் என்னை சந்தித்து கைகள் பொறுத்த வேண்டும் என கேட்டார். அவருக்கு இரண்டு கைகளை பொறுத்தி சாதனை செய்தது  அதிமுக ஆட்சியில் எனவும் அரசாங்க பள்ளி படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக . இதன்மூலம் 2160 பேர் மருத்துவம் பயில்கின்றனர். கொரோனா காலத்தில் கூட விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம் .

அதிமுக ஆட்சியில் புயல்களை  சந்தித்தோம்,  நிர்வாக திறன் உள்ள அரசு என நிரூபித்தோம். திமுக ஆட்சியில் ஒரு புயலுக்கு கூட 'குய்யோ முய்யோ' என புலம்புகிறார் ஸ்டாலின்.திறமை அற்ற முதல்வர் இந்த நாட்டை ஆளுகிறார். மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர்.

ஒற்றை செங்கலுடன் அலையும் உதயநிதி, ஊர் ஊராக செல்கிறார்.எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  பிரதமர் அழைத்து வந்து நாங்கள் அடிக்கல் நாட்டினோம். இந்த செங்கல்லை கடந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றி பெற்ற நீங்கள் நாடாளுமன்றத்தில் சென்று உதயநிதி காட்ட வேண்டும். செங்கலை காட்டி விளம்பரத்தை தேடி கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். இதனால் என்ன பயன்.? மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள். அதிமுக வந்திருந்தால் அங்கே செங்கல்லை அடிக்கி வைத்து தேவையான நிதியை நாங்கள் பெற்று இருப்போம் என எடப்பாடி பழனிச்சாமி பரப்புரையில் போது பேசினார்

 

Tags : செங்கலை காட்டி ஊர் ஊராக சுற்றும் உதயநிதி-எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.

Share via