ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருகிறார்- சி.பி.ஐ தேசிய செயலாளர் டி.ராஜா

by Editor / 10-04-2024 06:37:30pm
 ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருகிறார்- சி.பி.ஐ தேசிய செயலாளர் டி.ராஜா

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திருக்கோவிலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சி.பி.ஐ தேசிய செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவோடு, பாமகவுக்கு என்ன கொள்கை உடன்பாடு என ராமதாஸ் சொல்ல தயாரா?. ராமதாஸ் மக்களை ஏமாற்றி வருகிறார். இது ஒரு கேவலமான அரசியல். ஒன்றிரண்டு பாராளுமன்ற இடங்களுக்காக கொள்கைகளை அடகு வைத்துவிட்டார் ராமதாஸ். அம்பானி, அதானிகளின் கூட்டாளியான பாஜகவோடு, பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைக்கலாமா? என்று கேள்வியெழுப்பினார்.

 

Tags : சி.பி.ஐ தேசிய செயலாளர் டி.ராஜா

Share via