ஓடும் ரயிலில் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை
மும்பை கோரேகாவ் செல்லும் மின்சார ரயிலில் யோகா ஆசிரியையும் அவரது நண்பரும் நேற்று முன்தினம் (ஏப்ரல் 9) இரவு 8 மணியளவில் சென்றனர். அப்போது அந்த ரயிலில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி யோகா ஆசிரியையிடம் இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் அந்த இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எச்சரித்து நேற்று ஜாமீனில் விடுவித்தது.
Tags :