உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்

by Staff / 11-04-2024 03:23:01pm
உருது மொழியில் பேசி வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான்

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரும் நடிகருமான மன்சூர் அலிகான் இன்று ஆம்பூர் பஜார் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு, இறைச்சி வாங்க காத்திருந்த இஸ்லாமியர்களிடம் உருதுவில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய மன்சூர் அலிகான், இந்த வேலூர் தொகுதியில் 4 லட்சம் முஸ்லிம்கள் இருக்கிறீர்கள். இந்த திராவிட கட்சிகள் திமுக, அதிமுக இருவரும் யாராவது ஒரு இஸ்லாமியர்களுக்கு சீட் வழங்கினார்களா இல்லை அதற்காகத்தான் நான் களத்தில் இறங்கி இருக்கிறேன். உங்களுக்கு காவலன் நான்தான் என உருதுவில் பேசி வாக்கு சேகரித்தார்.தனக்கு வாக்களித்தால் நாயை கட்டி போட்டு பிஸ்கட் போட்டு வேலை வாங்குவது போல உத்தரவிட்டு வேலை வாங்கலாம் என பேசினார்.

 

Tags :

Share via