உளவுத்துறை ரிப்போர்ட்டால் அப்செட் நிர்வாகிகளை அழைத்து எச்சரித்த முதல்வர்
’நாற்பதும் நமதே, நாடும் நமதே’ என உற்சாகமாக பிரசாரம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலினிடம் பொள்ளாச்சி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு தொகுதிகளில் களம் திமுகவுக்கு சாதகமாக இல்லை எனவும் தேர்தல் பணிகளில் சுணக்கம் தொடர்ந்தால் வெற்றி பறிபோகும் எனவும் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், நிர்வாகிகளை அழைத்து எச்சரித்த முதல்வர் தேர்தல் பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
Tags :