விபத்தில் சிக்கிய தேர்தல் பணி அதிகாரிகள் - 3 பேர் பலி

by Staff / 12-04-2024 11:55:13am
விபத்தில் சிக்கிய தேர்தல் பணி அதிகாரிகள் - 3 பேர் பலி

திருவண்ணாமலை அருகில் அரசுப் பேருந்து மீது காவல் வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது .தேர்தல் பணிகளுக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த பெட்டாலியன் தலைவர் ஹேமந்த் குமார், துணை கமாண்டன்ட் பிரபாகரா, கன்மேன் விட்டல், போலீஸ்காரர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று (ஏப்ரல் 11) தருமபுரி அருகே காரில் சென்றபோது அரசுப் பேருந்தின்மீது நேருக்கு நேர் மோதியுள்ளனர். இந்த விபத்தில் உதவி கமாண்டன்ட் பிரபாகரா, டிரைவர் தினேஷ், கன்மேன் விட்டல்(35) ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் விபத்தில் மரணம் அடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via