கார் விபத்து: ஆசிரியர் உட்பட இருவர் பலி

by Staff / 16-04-2024 02:54:01pm
கார் விபத்து: ஆசிரியர் உட்பட இருவர் பலி

தஞ்சாவூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கணித ஆசிரியர் கிருபா பொன் பாண்டியன்(34) திருச்சியில் இருந்து காரில் தஞ்சாவூர் திரும்பிக் கொண்டிருந்தார். வல்லம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பை தாண்டி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பொன் கிருபா பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் நெடுஞ்செழியன்(32) தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Tags :

Share via