முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்
நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அதிகாலையிலேயே வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள SIET கல்லூரிக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.அரசியல் தலைவர்கள் காலையில் வந்து வாக்களிப்பது பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.இந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஏராளமான தலைவர்கள் கோடைவெயில்காரணமாக அதிகாலையிலேயே தங்களது வகை பதிவு செய்துவருகின்றனர்.
Tags : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்