ஸ்காட்லாந்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த இந்திய மாணவர்கள்

by Staff / 19-04-2024 01:46:28pm
ஸ்காட்லாந்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த இந்திய மாணவர்கள்

ஸ்காட்லாந்தில் உள்ள லின் ஆஃப் தும்மல் நீர்வீழ்ச்சியில் இந்திய மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திரநாத் மற்றும் சாணக்யா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். டண்டீ பல்கலைக்கழகத்தில் படித்த நான்கு நண்பர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​அவர்களில் இருவர் தண்ணீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via