பெயிண்டர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது

by Staff / 25-10-2022 01:16:47pm
 பெயிண்டர் கொலை வழக்கில் மூன்று பேர் கைது

மேட்டூர் தொட்டில் பட்டியைச் சேர்ந்தவர் ரகு என்கிற ரகுநாதன் (22) பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
தீபாவளி தினமான நேற்று நள்ளிரவில் ரகுவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன், நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த பிரகாஷ், தர்மல் 4-ரோட்டை சேர்ந்த மூர்த்தி ஆகியோருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் காயமடைந்த ரகு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ளார். இவரை பின் தொடர்ந்து வந்த கும்பல் மேட்டூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நுழைந்து சரமாரியாக வெட்டியும் கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர். அப்போது மருத்துவமனையில் இருந்த செவிலியர்களும் பணியாளர்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.அங்கு பணியில் இருந்த போலீசாரையும் அந்த கும்பல் விரட்டியதால் போலீசாரால் தடுக்க முடியவில்லை.சம்பவம் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்.தீபாவளி தினத்தில் அரசு மருத்துவமனையில் நுழைந்த பெயின்டர் வெட்டி கொலை செய்யப்பட்டசம்பவம் மேட்டூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.இந்த கொலை சம்பவம் தொடர்பாக வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

 

Tags :

Share via