மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

by Staff / 25-10-2022 01:20:22pm
 மலைப் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து இன்று காலை லாரி ஒன்று புறப்பட்டு வந்தது. சேலம் கோரிமேட்டை சேர்ந்த ஜான்பால் (வயது 43) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். மலைப்பாதையில் வந்தபோது, லாரி கட்டுப்பட்டை இழந்து வேகமாக சென்றது. இதையடுத்து ஓட்டுனர் ஜான்பால், பிரேக் போட்டு லாரியை நிறுத்த முயற்சித்தார். ஆனால் லாரி நிற்காமல் முன் சென்று கொண்டிருந்த 2 கார்கள் மீது மோதி, பின்னர் மலை பாதையின் தடுப்பு சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தால் ஓட்டுநர் ஜான்பால் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து ஏற்காடு போலீசார், விரைந்து வந்து லாரியை மலைப்பாதையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து பற்றி விசாரணை நடத்தியதில் லாரி ஓட்டுனர் ஜான்பால் குடிபோதையில் வாகனத்தை இயக்கியது தெரிய வந்தது. இதையடுத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via