தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலிமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 20-04-2024 09:24:50am
தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலிமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

Tags : மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Share via