கள்ளழகர் தங்கப் பல்லக்கில் மதுரை புறப்படுகிறார்
மதுரை அழகர்கோயில்லில் உள்ள கள்ளழகர் சித்திரை பெருந்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலையில் நடைபெற்ற 2ஆவது நாள் விழாவில் சர்வ அலங்காரத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் கள்ளழகர் பெருமாள்பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 21) மாலை தங்கப் பல்லக்கில் மதுரை புறப்படுகிறார். வழிநெடுக உள்ள 480க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 23ஆம் தேதி காலை மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.
Tags : கள்ளழகர் தங்கப் பல்லக்கில் மதுரை புறப்படுகிறார்