சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

by Staff / 09-05-2024 01:33:53pm
சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது சென்னை, சேலம், திருச்சியிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சவுக்கு சங்கர் மீது மொத்தம் 6 வழக்குகள் போடப்பட்டுள்ளன. மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று அவர் கையில் கட்டுடன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 15 நாட்கள் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via