ஓ.பன்னீர்செல்வத்துக்கு நோட்டீஸ்
சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வனை விட 11,055 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். போடி தொகுதியில் ஓ . பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .
ஓபிஎஸ் தனது வேட்புமனுவில் கடன் மதிப்பை குறைத்துக் காட்டியதாகவும் , எனவே அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி போடி தொகுதி வாக்காளர் மிலானி வழக்கு தொடர்ந்தார் .இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது . அப்போது , இவ்வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ . பன்னீர்செல்வம் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
Tags :