தூதரகங்கள், தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் - தாலிபான்கள்

by Admin / 14-08-2021 11:37:36am
தூதரகங்கள், தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் - தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், தூதரக அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த மாட்டோம் என தலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.
 
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படை வெளியேறி வருகிறது. இதையடுத்து அங்கு தாலிபான்களில் கை ஓங்கியுள்ளது.

தாலிபான்களின் வன்முறை வெறியாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அங்குள்ள தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியில் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் இறங்கியுள்ளனர்.

 இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தலிபான் செய்தித் தொடர்பாளர் முகமது சுஹைல் ஷாஹீன், இந்தியா சார்பில் ஆப்கான் மக்களுக்கான கட்டப்பட்ட அணை உள்ளிட்ட பல்வேறு தேசிய உள்கட்டமைப்பு திட்டங்களை பாராட்டுவதாகவும், இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு எதிராக செயல்படும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களுடன் தாலிபான்கள் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என மறுத்த அவர், இந்திய தூதுக்குழு தாலிபான் தூது குழுவை சந்தித்ததாக வெளிவரும் செய்தியில் உண்மையில்லை என்றும் கூறினார்.
 

 

Tags :

Share via