சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த 40 அரசு பேருந்துகள் நிறுத்தம்:

by Editor / 15-04-2021 10:39:24am
 சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த 40 அரசு பேருந்துகள் நிறுத்தம்:

கடந்த 2 நாட் களுக்கு முன்பு சென்னைக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்தது. சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை செல்ல விரும்பு வோர்களின் எண்ணிக்கை படிப் படியாக குறைய தொடங்கி யுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக, வேலூர் மண்டலத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த 15 அரசுப் பேருந்துகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டன. தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக பயணிகள் இல்லாமல் வேலூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின.

இதனால், சென்னை, தாம்பரம் மார்க்கமாக செல்லக்கூடிய மேலும் 25 பேருந்துகள் நேற்று நிறுத்தப்பட்டன. சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த மொத்த பேருந்துகளில் 40 பேருந்துகள் இதுவரை நிறுத்தப்பட்டுள்ளன.

 

Tags :

Share via