12 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்... திருப்பூரில் 6 பேர் கைது...

by Admin / 20-08-2021 01:06:02pm
12 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்... திருப்பூரில் 6 பேர் கைது...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் 12 டன்  குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் சோதனையில் ஈடுப்பட்ட போலீசார், கோழிப்பண்ணைகள், விசைத்தறி கூடம் ஆகியவற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2 கோடி மதிப்பிலான 12 டன் குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக சுந்தரபாண்டி, அந்தோணி ஜெகன், நவராஜ், குணசேகரன், அந்தோணிராஜ் , தானராஜ் ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார், மேலும், 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via