பொள்ளாச்சியில் லாரி மோதி சுவர் இடிந்தது: 6 பேர் காயம்

by Editor / 22-08-2021 05:12:54pm
பொள்ளாச்சியில் லாரி மோதி சுவர் இடிந்தது:  6 பேர் காயம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில், இரவு நேர பானிபூரி கடை செயல்படுகிறது. 10க்கும் மேற்பட்டோர் நின்று, பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது, கடையின் அருகே உள்ள காலி இடத்தில் இருந்து, நுால் பண்டல் ஏற்றிக்கொண்டு லாரி வெளியே வந்துள்ளது. வால்பாறை ரோட்டில், லாரி திரும்பிய போது எதிர்பாராதவிதமாக, சுற்றுச்சுவரில் லாரியின் பின்பக்கம் மோதியது. இதில், சுவர் சரிந்து கடை மீது விழுந்தது. கடையில் நின்ற ஆறு பேர், இடிபாடுகளில் சிக்கினர்.பொதுமக்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில் காயமடைந்த கிஷோர், 14, சிவன்யா, 4, லட்சுமணன், 47, நித்தீஸ், 4, விக்னேஷ், 17, லக்கிகுமார், 23 ஆகியோர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

 

Tags :

Share via