அதிகரிக்கும் கடத்தல் வழக்குகள்… 17 வயது பள்ளி சிறுமியை கடத்தி சென்ற நபர்

by Admin / 05-09-2021 05:14:19pm
அதிகரிக்கும் கடத்தல் வழக்குகள்… 17 வயது பள்ளி சிறுமியை கடத்தி சென்ற நபர்


 
கடலூர் மாவட்டம் புவனகிரி புதுச்சத்திரத்தில் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் கடந்த 29.06.21 தேதி தனது மகள் காணவில்லை என்று நெய்வேலி சேர்ந்த அறிவுக்கரசு கொடுத்த புகாரில் பேரில் வழக்கு பதியப்பட்டது.

  அதில், அலமேலு மங்கா  புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது சந்துரு என்பவர் சிறுமியை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், சந்துருவை போக்சோவில் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
 
தொடர்ந்து கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார்.

 

Tags :

Share via