கள்ளக்காதல்- மகனை சூடு போட்டு சித்ரவதை செய்த தாய்

by Editor / 07-09-2021 08:32:44pm
கள்ளக்காதல்- மகனை சூடு போட்டு சித்ரவதை செய்த தாய்

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது45). இவரது இரண்டாவது மனைவி சாந்தி தேவி ( வயது 35 ). இவருக்கு பாலசந்திரன் (வயது 12)| என்ற மகன் உள்ளார். இவன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் சாந்தி தேவியின் கணவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காணாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சுலைமான் முகமது என்பவர் சூரப்ப நாயக்கரன் சாவடியில் உள்ள சாந்திதேவி இல்லத்திற்கு வந்து, உங்கள் வீட்டில் பில்லி, சூனியம் இருப்பதாகவும், அவற்றை எடுத்து விடுகிறேன் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் சுலைமான் முகமதுக்கும் சாந்திதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

கொரோனா காலமாக இருந்ததால் பாலசந்திரன் பள்ளிக்கு செல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்துள்ளான். இதனால் சாந்தி தேவியும், சுலைமான் முகமதும் உல்லாசமாக இருக்கமுடியவில்லை. இதனால் இருவரும் சேர்ந்து பாலச்சந்திரனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து துன்புறுத்தியுள்ளனர். இதை பாலச்சந்திரன் பக்கத்தில் உள்ள வீட்டுக்காரரிடம் சொல்லி என்னை காவல்துறையிடம் இல்லை வேறு எங்கேயாவது என்னை கொண்டு போய் விட்டு விடுங்கள் என்று கதறி அழுதுள்ளான்.

இந்த தகவல் அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா அவர்கள் தலைமையிலான போலீசார் சாந்திதேவி இல்லத்திற்கு விரைந்து சென்று, சிறுவன் பாலச்சந்திரனை விசாரணை செய்ததில், சிறுவனை துன்புறுத்திய சம்பவம் உண்மை என்று தெரிய வந்ததது. இதனையடுத்து சாந்தி தேவி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் சுலைமான்முகமது ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர். உடல்முழுவதும் காயத்தால் பாதிக்கப்பட்ட பாலசந்திரனை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த போலீசார், அவனை சிறுவர் காப்பகத்தில் அனுமதித்துள்ளனர்.

 

Tags :

Share via