மக்களிடம் ஓலா நிறுவனம் மன்னிப்பு

by Editor / 09-09-2021 09:28:59am
மக்களிடம் ஓலா நிறுவனம் மன்னிப்பு

இந்தியாவில் பிரபலமாக இருந்து வரும் ஆன்லைக் கால் டாக்ஸி நிறுவனம் ஓலா. இந்த நிறுவனம் சமீபத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்க போவதாக அறிவித்து முன்பதிவுகளை தொடங்கியது. பலரும் முன்பதிவு செய்திருந்த நிலையில் சமீபத்தில் தாங்கள் தயாரித்து வரும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மாடல்களையும் வெளியிட்டது ஓலா.

இந்த அறிவிப்பின்போது செப்டம்பர் 8ம் தேதி முதல் எலெக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டர் விற்பனை தொடங்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இந்த விற்பனை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ள ஓலா நிறுவனம் சில காரணங்களால் 8ம் தேதி விற்பனையை தொடங்க முடியவில்லை என்றும், கண்டிப்பாக செப்டம்பர் 15 அன்று விற்பனை தொடங்கும் என்றும், காலதாமதத்திற்கு மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. 

 

Tags :

Share via