லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதல்: வாலிபர் பலி

by Editor / 03-10-2021 05:29:46pm
லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதல்: வாலிபர் பலி

சென்னை திருவல்லிக்கேணியில் அதிவேகமாக வந்த லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலியானார்.

அதிகாலையில் டீ குடிக்க வந்தவருக்கு நேர்ந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

சென்னை அண்ணாசாலை, தாயார் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ஜீனத் பாட்ஷா (வயது 24). இன்று அதிகாலையில் டீ குடிப்பதற்காக வீட்டிலிருந்து வாலாஜா சாலைக்கு வந்தார். பிறகு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி சென்றார்.

அப்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று ஜீனத் பாட்ஷாவின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ஜீனத்பாட்ஷா லாரியின் பின் பக்க டயரில் சிக்கிக் கொண்டார். 20 மீட்டர் இழுத்து கொண்டு சென்றதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனை கண்ட டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைந்து போக வைத்தனர். இந்த விபத்து குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via