நெல்லை சந்திப்பில் ஆம்னி கார் தீப்பிடித்து எரிந்தது
நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் வள்ளி விநாயகம் .இவர் தனது குடும்பத்தினருடன் . வண்ணாரப்பேட்டை நோக்கி தனது ஆம்னி காரில் சென்றார்.நெல்லை சந்திப்பு அரவிந்த் கண் மருத்துவமனை முன் வரும் போது காரில் இருந்து புகை வந்ததை கவனித்தார். நொடிப் பொழுதில் காரினை சாலையின் ஓரம் நிறுத்தினார். உடனே காரில் இருந்தவர்கள் இறங்கி அலறி அடித்து ஓடின.ர் இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
காரை ஓட்டி வந்த வள்ளி விநாயகம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார் தகவலின் பேரில் விரைந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு படையை சேர்ந்த வீரர்கள் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் தீயை அணைத்தனர்.கார் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Tags :