உத்தரப்பிரதேசத்தில்  பஸ் – டிரக் மோதல்: 9 பேர் பரிதாப சாவு 27 பேர் படுகாயம்

by Editor / 07-10-2021 04:36:24pm
உத்தரப்பிரதேசத்தில்  பஸ் – டிரக் மோதல்: 9 பேர் பரிதாப சாவு 27 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேசத்தில் பஸ் டிரக் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் பலத்த காயமடைந்தனர். 


இந்த பஸ் டெல்லியில் இருந்து லக்னோ வழியாக உத்தரப்பிரதே சத்தின் பாரபங்கி நகரில் சென்று கொண்டு இருந்ததுது. பஸ் மிக அதிக வேகத்தில் வந்த டிரக்குடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் காயமடைந்து உள்ளனர் என்று மாவட்ட நீதிபதி ஆதர்ஷ் சிங் கூறினார்.


இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், பஸ்சில் இருந்து சில பகுதிகளை துண்டித்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.


பலத்த காயமடைந்தவர்கள் மாநில தலைநகர் லக்னோவில் உள்ள கேஜிஎம்யூ மையத்திற்கு மாற்ற பட்டனர், மற்றவர்கள் பாராபங்கி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பஸ்சும் சரி, டிரக்கும் சரி மிக அதிக வேகத்தில் வந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தார்கள். இறந்தவர்கள் யார் யார் என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

 

Tags :

Share via