4 நாட்களில் கலைந்துபோன கனவுகள் விபத்தில் புதுமணத்தம்பதி பலியான பரிதாபம்.

by Editor / 02-11-2021 08:00:25pm
4 நாட்களில் கலைந்துபோன கனவுகள் விபத்தில் புதுமணத்தம்பதி பலியான பரிதாபம்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் மனோஜ்குமார் பொறியியல் பட்டதாரி.இவருக்கும், சென்னை பீர்க்கன்காரணையை சேர்ந்த மருத்துவர் கார்த்திகா (30) என்பவருக்கும் கடந்த 28-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு மனைவியுடன் சென்னையில் தங்கியிருந்த மனோஜ்குமார், தனது மனைவி கார்த்திகாவுடன் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான அரக்கோணம் நோக்கி காரில் சென்றார். திருவள்ளூரை அடுத்த கூவம் ரோட்டில் சென்றபோது, எதிரே வளைவில் சிமெண்டு கலவை எந்திரம் இணைக்கப்பட்டு வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக புதுமண தம்பதி சென்ற கார் மீது  சிமெண்டு கலவை எந்திரம் இணைக்கப்பட்டு இருந்த லாரி கவிழ்ந்தது.

லாரிக்கு அடியில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியாது.இதில்  புதுமண தம்பதி மனோஜ்குமார்-கார்த்திகா இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  திருமணமான 4 நாட்களில் விபத்தில் புதுமண தம்பதி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் விபத்து நடந்த பகுதியில் ஆபத்தான வளைவு பகுதிகள் என எச்சரிக்கை எதுவுமில்லையெனவும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via