நாகை மீனவர்கள் 5 பேர் சொந்த ஊர் திரும்பினார்கள்
அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இலங்கை அரசால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 18 பேர் கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 மீனவர்கள் இன்று சொந்த ஊர் திரும்பினார்கள்,நாகை துறைமுகம் வந்த மீனவர்களை அவர்களுடைய உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
Tags :